சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
7.082   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஊன் ஆய், உயிர் புகல்
பண் - நட்டபாடை   (திருச்சுழியல் (திருச்சுழி) இணைத்திருமேனிநாதர் துணைமாலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=U25xxHVnmZ0

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.082   ஊன் ஆய், உயிர் புகல்  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருச்சுழியல் (திருச்சுழி) ; (திருத்தலம் அருள்தரு துணைமாலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு இணைத்திருமேனிநாதர் திருவடிகள் போற்றி )
ஊன் ஆய், உயிர் புகல் ஆய், அகலிடம் ஆய், முகில் பொழியும்
வான் ஆய், அதன் மதி ஆய், விதி வருவான் இடம்-பொழிலின்
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும்-திருச் சுழியல்,
நானாவிதம் நினைவார்தமை நலியார், நமன்தமரே.

[1]
தண்டு ஏர் மழுப்படையான், மழவிடையான், எழு கடல் நஞ்சு
உண்டே புரம் எரியச் சிலை வளைத்தான்,-இமையவர்க்கா,-
திண் தேர்மிசை நின்றான் அவன், உறையும் திருச் சுழியல்-
தொண்டே செய வல்லார் அவர் நல்லார்; துயர் இலரே.

[2]
கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற,
கொவ்வைத்துவர் வாயார் குடைந்து ஆடும் திருச் சுழியல்,
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார்,
அவ் அத் திசைக்கு அரசு ஆகுவர்; அலராள் பிரியாளே.

[3]
மலையான் மகள் மடமாது இடம் ஆகத்தவன், மற்றுக்
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான், திருச் சுழியல்
அலை ஆர் சடை உடையான், அடி தொழுவார் பழுது உள்ளம்
நிலையார்; திகழ் புகழால் நெடுவானத்து உயர்வாரே.

[4]
உற்றான், நமக்கு; உயரும் மதிச் சடையான்; புலன் ஐந்தும்
செற்று ஆர் திருமேனிப் பெருமான்; ஊர் திருச் சுழியல்
பெற்றான், இனிது உறைய; திறம்பாமைத் திருநாமம்
கற்றார் அவர் கதியுள் செல்வர்; ஏத்தும்(ம்)மது கடனே.

[5]
மலம் தாங்கிய பாசப் பிறப்பு அறுப்பீர்! துறைக் கங்கைச்-
சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திருச் சுழியல்
நிலம் தாங்கிய மலரால்; கொழும் புகையால், நினைந்து ஏத்தும்!
தலம் தாங்கிய புகழ் ஆம்; மிகு தவம் ஆம்; சதுர் ஆமே!

[6]
சைவத்த செவ் உருவன்; திருநீற்றன்(ன்), உரும் ஏற்றன்;
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும்(ம்) எரிசெய்தான்;
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன்; திருச் சுழியல்
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல்(ல்) எளிது அன்றே!

[7]
பூ ஏந்திய பீடத்தவன் தானும், அடல் அரியும்,
கோ ஏந்திய வினயத்தொடு குறுகப் புகல் அறியார்-
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திருச் சுழியல்,
மா ஏந்திய கரத்தான், எம சிரத்தான் தனது அடியே.

[8]
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி
செண்டு ஆடுதல் புரிந்தான் திருச் சுழியல் பெருமானைக்
குண்டாடிய சமண் ஆதர்கள் குடைச் சாக்கியர் அறியா,
மிண்டாடிய அது செய்தது(வ்) ஆனால், வரு விதியே

[9]
நீர் ஊர் தரு நிமலன், திருமலையார்க்கு அயல் அருகே
தேர் ஊர் தரும் அரக்கன் சிரம் நெரித்தான், திருச் சுழியல்
பேர் ஊர் என உறைவான், அடிப்பெயர் நாவலர்கோமான்
ஆரூரன-தமிழ்மாலைபத்து அறிவார் துயர் இலரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list